வியாழன், 13 அக்டோபர், 2022

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சினிமா பார்ப்பதே பாவம் என்ற நம்பிக்கை இருந்தது. சினிமாவைப் பார்ப்பதே பாவம் என்ற நிலை இருந்தபோது சினிமாவில் நடிப்பது பற்றி கேட்கவா வேண்டும். சினிமாவில் நடிக்க வருவதற்கு ஆண்கள் தயங்கினார்கள். அதிலும் பெண்கள் அஞ்சி நடுங்கினர். விலைமாதுக்கள் கூட சினிமாவில் நடிக்க பந்தார்கள். 'அது தருகிறேன்.. இது தருகிறேன்..' என்று கெஞ்சி கூத்தாடித்தான் ஆண்களை நடிக்க வைத்தனர். கெஞ்சிக்கூத்தாடியும் பெண்கள் நடிக்க வராததால், ஆண்களையே பெண் வேடமிட்டு நடிக்க வைத்தார்கள்.

பின்னாளில், சினிமா ஒரு கலை என்பதையும், அது ஒரு தொழில் என்பதையும் உணர்ந்து ஹாலிவுட்டில் பெண்கள் நடிக்க வந்தார்கள். இந்தியாவைப் பொறுத்தவையிலும் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் முதலில் நடிக்க சம்மதித்தனர்.

இந்தியாவின் முதல் படமான 'ராஜா ஹரிச்சந்திரா' படத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர்.  தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் நடிக்க வந்த முதல் நடிகை டி.பி.ராஜலட்சுமி. இவர், தமிழ் சினிமாவின் முதல் நடிகை என்பதோடு அல்லாமல் முதல் பெண் இயக்குநர், முதல் பெண் தயாரிப்பாளர், முதல் பெண் பாடலாசிரியர், நாவலாசிரியர் என்ற பெருமைக்கும் உடையவர்.

ராஜலட்சுமியின் பூர்வீகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அமைந்த சாலியமங்கலம். அக்கிராமத்தின் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரிகள். இவரது குடும்பத்தினர் திருவையாறில் வாழ்ந்து வந்தனர். திருவையாறில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தவர், டி.பி.ராஜலட்சுமி. திருவையாறு பஞ்சாபகேசன் என்பதன் சுருக்கமே டி.பி. என்று அவரது பெயருக்கு முன்னாள் போடும் இன்ஷியல். ஐந்து வயதிலேயே காதால் கேட்டதை அப்படியே பாடுவதும் கண்ணால் பார்ப்பதை அப்படியே ஆடிக் காட்டுவதுமாக இருந்தார் ராஜலட்சுமி.

அவருக்கு அந்த கால வழக்கப்படி ஏழு வயதில் திருமணம் நடந்தது. 8 வயதில் வரதட்சனை விவகாரத்தினால் வாழாவெட்டி ஆனார். வறுமையினாலும் மகளின் நிலைமையினாலும் மனங்கலங்கி படுத்த படுக்கையாகக் கிடந்து பஞ்சாபகேச அய்யர் மறைந்தார். இதையடுத்து, பிழைப்புதேடி தாயாருடன் டி.பி.ராஜலட்சுமி திருச்சிக்கு குடிபெயர்ந்தார்.

ராஜலட்சுமியின் அம்மா மீனாட்சி நன்கு பாடக்கூடியவர், அவரிடம் படித்து நன்கு பாடக் கற்றுக்கொண்டார் ராஜலட்சுமி. நாடகங்களைப் பார்த்து நடிப்பின் மீது மிகுந்த ஆவல் கொண்ட ராஜலட்சுமிக்கு, தானும் நடித்து சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

நாடகத்தில் நடிப்பது என்றாலே கூத்தாடி பிழைப்பு, கேவலம் என்று அவரது உறவினர்கள் கருதிய காலம் அது. இதனால் தன் மகளை நடிக்க அனுப்புவதற்கு தயங்கினார், மீனாட்சி அம்மாள். ஆனால், வறுமையின் கொடுமையை சமாளிக்க ராஜலட்சுமி நடிக்க செல்வதில் பிடிவாதமாக இருந்ததால், அவரால் மகளை தடுக்க முடியவில்லை. பிறகு சம்மதித்தார்.

மதுரை சாமண்ணா நாடகக் கம்பெனியில் சேர வாய்ப்பு கேட்டு தேடி சென்ற போது, ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்பு. பெண்களுக்கு இல்லை என்று மறுத்தனர். ஆனால், அங்கு வந்திருந்த நாடக மேதை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியின் திறமையையும் ஆர்வத்தையும் கண்டு அவரை சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்திருக்கிறார்.

மாத சம்பளம் 50 ரூபாய் பேசப்பட்டு வாய்ப்பை வழங்கியது சாமண்ணா நாடகக்குழு. தனது 11வது வயதில் ராஜலட்சுமி நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் பவளக்கொடி. இந்த நாடகத்தில் புலேந்திரன்  வேடத்தில் நடித்தார் ராஜலட்சுமி.

அதன் பிறகு படிப்படியான முன்னேற்றம். கே.எஸ்.செல்லப்பாவின் நாடகக் கம்பனியில் 75 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து நடித்தார். பின்னர் கே.பி.மொய்தீன் சாகிப் நாடக மன்றத்தில் மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்த நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள்.

பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் 'ராமா பட்டாபிஷேகம்', எம்.கே.தியாகராஜ பாகவதருடன் 'பவளக்கொடி', 'கோவலன்' ஆகிய சில நாடகங்களில் நடித்தார்.

நாடகங்களில் வெறுமனே நடித்து ஆடிப்பாடுவது என்றில்லாமல், தேசபக்திப் பாடல்களைப் பாடி சுதந்திர தாகத்தை தூண்டிவந்தார் ராஜலட்சுமி. 'ராட்டினமாம் காந்தி கைபாணமாம்', 'இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை' ஆகிய தேசபக்தி பாடல்கள் மிகப்பிரபலம். இவரது பாடல்களுக்காகவே நாடகங்கள் பார்க்க ரசிகர்கள் கூடினர். தேசபக்தி பாடல்களை பாடியது குற்றமென்று ஆங்கிலேய அரசினரால் பலமுறை கைது செய்யப்பட்டார், ராஜலட்சுமி.

மேடைகளில் பாடி நடித்து புகழ் பெற்ற ராஜலட்சுமியின் திறமையை கண்ட சிவகங்கை ஏ.நாராயணன், தனது தயாரிப்பில் ஆர்.பிரகாசம் இயக்கிய ‘கோவலன்’ மௌனப் படத்தில் மாதவியாக நடிக்க வைத்து பேசப்பட வைத்தார். 1929ஆம் ஆண்டு கோவலன் மௌனப் படம் மூலம்  அறிமுகமான  ராஜலட்சுமி, அடுத்து ராஜா சாண்டோ இயக்கிய உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, ஆகிய இரண்டு மௌனப் படங்களிலும் நடித்தார். அப்போது அவருக்கு அந்தப் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சுப்பிரமணியம் அவளின் நட்புக் கிடைத்தது.

ஏற்கனவே ராஜலட்சுமியின் குரலில் பாடல் ஒலி தட்டுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தமிழின் முதல் ஒலிப் பாடல் படத்திளும் நடிக்க ராஜலட்சுமிக்கு  அழைப்பு வந்தது. அதற்கு சிபாரிசு செய்தவர், கே.சுப்பிமணியம்.

மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரிப்பில் 1931ல் "குறத்தி பாட்டும் நடனமும்" என்ற நான்கு ரீல் கொண்ட ஒலிப்படத்தில் நடித்தார், ராஜலட்சுகி. தமிழ் சினிமாவின் முதல் ஒலியமைப்புக் கொண்ட குறும்படம் அது. அதன் பிறகு பேசும் படத்திலும் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. 

உதவி இயக்குநராக இருந்த அதே ஆர்.சுப்பிரமணியன் அழைத்து உங்கள் திறமைக்கும் குரலுக்கும் பேசும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பம்பாய்க்கு போகலாம் வாருங்கள் என்றார்.

தெரிந்த பாடலை பாடச்சொன்னார்கள். தெரிந்த நடனத்தை ஆடச்சொன்னார்கள். நடிக்க வைத்து பார்த்தார்கள். அந்த சோதனையில் எல்லாம் டி.பி.ராஜலட்சுமி வெற்றிபெறவே காளிதாஸ் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

ஆமாம்... தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார், ராஜலட்சுமி. இந்தியில் முதல் பேசும் படத்தை தயாரித்த அர்தேஷிர் இரானி தயாரிப்பில், அவரது உதவியாளர் எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் காளிதாஸ் படம் உருவானது. அந்தப் படத்தில் கதாநாயகன் தெலுங்கு என்பதால் அவர் தெலுங்கில் பேசி நடித்திருப்பார். கதாநாயகி ராஜலட்சுமி தமிழர் என்பதால் அவர் தமிழில் பேசி நடித்திருப்பார். துணை நடிகர்கள் அனைவரும் ஹிந்திக்காரர்கள் என்பதால் அவர்கள் ஹிந்தியில் பேசி நடித்தார்கள்.

இப்படி பல மொழிகள் பேசி தயாரான காளிதாஸ் படம் 31.10.1931ல் திரைக்கு வந்தது. சென்னையில் 'கினிமா செண்ட்ரல்' தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

காளிதாஸ் படத்திற்கு, 'மிஸ் டி.பி.ராஜலஷ்மி நடிக்கும் காளிதாஸ். முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்'' என்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

டி.பி.ராஜலட்சுமியின் பாடல்களால் காளிதாஸ் படம் பெரும் வெற்றி அடைந்தது. காளிதாஸ் படத்தின் வெற்றி ராஜலட்சுமிக்கு இன்னும் அதிக புகழையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

1932ல் காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து 'ராமாயணம்' படத்தில் நடித்தார். இதில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இதன் மூலம் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமையும் ராஜலட்சுமியையே சேரும். இந்தக் காலகட்டத்தில் இவருக்கு 'சினிமா ராணி' என்ற பட்டமும் வழங்கி மகிழ்ந்தனர் ரசிகர்கள்.

1933 இல் வள்ளி திருமணம் என்கிற பெயரில் இரண்டு படங்கள் வெளியானது. அதில் டி.பி.ராஜலட்சுமி நடித்து வெளிவந்த ‘வள்ளி திருமணம்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏன் தமிழின் முதல் வெற்றிப்படம் என்றே சொல்லாம்.

'வள்ளித் திருமணம்' படத்தில் நடித்த போது, நாரதர் வேடத்தில் நடித்த டி.வி.சுந்தரத்துடன் காதல் உண்டாகி, அவரை மறுமணம் செய்து கொண்டார், ராஜலட்சுமி. விடுதலை போராட்டத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ராஜலட்சுமி. அவரைப் போலவே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ்காரர் நடிகர் டி.வி.சுந்தரம்.

திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்புக்காக இருவரும் கல்கத்தாவுக்கு சென்றவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள். அங்கு திரௌபதி, அரிச்சந்திரா, குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்கள். சுந்தரம், ராஜலட்சுமி தம்பதியினருக்கு 1936ல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கமலா என்ற பெயரிட்டார்கள்.

கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய ராஜலட்சுமி, தனது பெயரில் 'ஸ்ரீராஜம் டாக்கீஸ்' என்ற கம்பனியைத் தொடங்கி, தன் மகள் பெயரில் 'மிஸ் கமலா' என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்து அந்தப் படத்திற்கு தானே கதை, வசனம் எழுதி கதாநாயகியாக நடித்து, தயாரித்து, இயக்கினார்.

1936ஆம் ஆண்டு வெளிவந்த  'மிஸ் கமலா' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இதன் மூலம் தமிழின் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குநர் என்கிற பெருமையை பெற்றார்.

மிஸ்.கமலா படத்தைத் தொடர்ந்து 'மதுரை வீரன்' என்கிற படத்தை இயக்கி 1938ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் இயக்கிய திரைப்படங்கள் இரண்டுக்கும் இவரது சகோதரர் டி.பி.ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பெனியை மற்றொரு சகோதரர் டி.பி.ராஜசேகரன் கவனித்து வந்தார்.

நாடகம், சினிமாவோடு நின்றுவிடாமல் இலக்கியத்துறையில் கால்பதித்து நாவல்கள் எழுதினார். கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன், விமலா, சுந்தரி, வாஸந்திகா, உறையின் வாள் என்று ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய நாவல்களில் பெண் உரிமைகளை வலியுறுத்தி வந்தார்.

இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று நாடகங்கள் நடத்தி வந்தார் ராஜலட்சுமி. 1935ல் பர்மாவில் நாடகம் நடத்தினார். பர்மாவின் ரங்கூன் நகரில் இவரது நாடகம் மூன்று மாதத்திற்கு மேல் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தது. 1936ல் இலங்கையில் நாடகம் நடத்தினார். இவரது நாடகத்தை கண்டுகளித்த இலங்கை ரசிகர்கள் இவருக்கு 'இலங்கை திலகம்' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.

காளிதாஸ், ராமாயணம், வள்ளித்திருமணம், சத்தியவான் சாவித்திரி, திரௌபதி வஸ்திராப ஹரணம், கோவலன், பக்தகுசேலா, குலேபகாவலி, பூர்ணசந்திரா, சம்பூர்ண அரிச்சந்திரா, பாமா பரிணயம், மிஸ்கமலா, வீர அபிமன்யு, சீமந்தனி, கௌசல்யா பரிணயம், நந்தகுமார், அநாதைப் பெண் சுகுண சரஸா, தமிழ் தியாகி, மதுரைவீரன், குமார குலோத்துங்கன், பக்த குமணன் (அல்லது) ராஜயோகி, மாத்ருதர்மம், உத்தமி, பரஞ்சோதி, ஜீவஜோதி, இதயகீதம் என்று ராஜலட்சுமி 27 படங்களில் நடித்துள்ளார்.

விதவை மறுமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து புரட்சியை ஏற்படுத்திய ராஜலட்சுமி, குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும், சிசுக் கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். பெண் சிசுக்கொலைக்கு குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சிசு கொலை செய்யப்படவிருந்த ஒரு பெண் சிசுவை தானே தத்தெடுத்து, அக்குழந்தைக்கு 'மல்லிகா' என பெயர் சூட்டி வளர்த்து, அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்துவைத்து புரட்சி செய்தார் ராஜலட்சுமி.

சினிமாவில் பணம், புகழ் சேர்ந்தாலும் ராஜலட்சுமி தன் சுயமரியாயை விட்டுக்கொடுக்காதவர். இதனால், நந்தகுமார் படத்தில் நடித்தபோது, சர்ச்சை உண்டானது. அப்படத்தில் கிருஷ்ணனின் தாய் யசோதா வேடத்தில் நடித்தார். புராண காலத்தின்படி யசோதை கச்சை கட்டித்தான் நடிக்க வேண்டும். ஆனால், ராஜலட்சுமியோ கச்சை அணிய மாட்டேன். ரவிக்கைதான் அணிவேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார்.

இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கும் நடிகை கச்சை அணிந்துதான் நடிக்கிறார் என்று ஏ.வி.எம்.செட்டியார் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப்பார்த்தார். ரவிக்கைதான் என்று ராஜலட்சுமி பிடிவாதமாக இருந்தார்.

வற்புறுத்தினால் படத்தில் நடிக்காமல் விலகிவிடுவேன் என்று கூறிவிட்டதால், செட்டியார் அதற்கு மேல் அவரிடம் பேசவில்லை. கடைசியில் 'நந்தகுமார்' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் ரவிக்கை அணிந்துதான் வந்தார் யசோதா.

நாற்பதுகளில் சினிமாவின் முகம் மாறியது. தமிழ் சினிமாவின் வடிவம் மாறியதோடு மட்டுமல்லாமல் புதியவர்கள் வருகையும் அதிகரித்தது. சினிமாவுக்கு வர தயங்கியிருந்தது எல்லாம் ஒரு காலம் என்றாகி, சினிமாவுக்கு ஆர்வத்துடனும், தைரியத்துடனும் நடிக்க வந்து கொண்டிருந்தனர். எதிலும் விட்டுக்கொடுத்து போகாத ராஜலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் வயது மூப்பின் காரணமாக படங்களே இல்லாத நிலை ஏற்பட்டது.

19 ஆண்டுகாலம் திரையுலகில் வலம் வந்த ராஜலட்சுமி கடைசிக்காலத்தில் 'ஜீவஜோதி', 'இதயகீதம்' படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தார். 1950-ல் வெளிவந்த 'இதயகீதம்' என்ற படம்தான் டி.பி.ராஜலட்சுமி நடித்த கடைசிப் படம்.

சுதந்திரப்போராட்டத்தை மையமாக வைத்து 'இந்தியத்தாய்' என்ற பெயரில் ஒரு தேசபக்தி படத்தை இவர் இயக்கி, தயாரித்தார். சென்சார் கெடுபிடிகளுக்கு சிக்கி மீள முடியாததால், பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனாலும், ''இந்திய விடுதலை போராட்டத்திற்கு நான் அளித்த சிறு காணிக்கை இது'' என்று கூறிவிட்டார்.

அவர் அப்படி கூறினாலும், அதற்கு பின்னால் இருந்த அவரின் வலியை உணரமுடிந்தது. அந்தப் படத்தினால் ஏற்பட்ட கடன் சுமையினால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானார். இதனால் ராஜலட்சுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி, அதன் விளைவாக கைகால்கள் இயங்காமல் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையானார்.

கீழ்ப்பாக்கத்தில் இவருக்கு 10 சொந்த வீடுகள் இருந்தன. கடைசிக்காலத்தில் எல்லாம் விற்றுத்தீர்ந்த பின்னர், ஒரே ஒரு வீடு மட்டும் மிச்சம் இருந்தது. அந்த வீட்டையும் தன் மகள் கமலாவிற்கு கொடுத்துவிட்டு, வாடகை வீட்டில் வசித்தார். சென்னை கீழப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் அவரின் கடைசிக்காலங்கள் கழிந்தன.

காலத்தின் கோலத்தை நினைத்து நினைத்து மனம் உடைந்துபோன ராஜலட்சுமி நினைவிழந்தும் போனார். இனி இழப்பதற்கு உயிரைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற நிலையில் நாட்கள் நகர்ந்தபோது, 1964ல் அவர் அதையும் இழந்தார்.

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே இழந்தவர் டி.பி.ராஜலட்சுமி. ரசிகர்களால் 'சினிமா ராணி' என்று கொண்டாடப்பட்ட அவர், இன்று தனது படங்களின் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முதல் பேசும்பட நாயகன் பி.ஜி.வெங்கடேஷ்

இந்த பகுதியில் இன்னைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகிற தகவல்  தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் படத்தில் கதையின் நாயகனாக நடித்த பிஜி வெங்கடேசன் பற்றித்தான்...  பிஜி வெங்கடேசன் 1910 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி சேலத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே பாட்டு கூத்து என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், நாடகங்கள் நடக்கிற இடம், கூத்து நடக்கிற இடங்களில் தவறாமல் ஆஜராகி விடுவார்.

அப்படி நாடகத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல நாடக மேடைகளில் ஏறும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதில் பி.யு,சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்த போது பெரிய நம்பிக்கையும் மரியாதையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவராக இருந்தாலும், தமிழ் வசனங்ளை  பேசுவதிலும்,  பாடுவதிலும் பெரிய திறமைசாலி. தனது குரல்வளத்தால்  எல்லோரையும் கவனிக்க வைத்தவர். பின்னாளில் இவரை தென்னிந்திய சைக்கால் என பத்திரிகைகள் குறிப்பிடும் அளவுக்கு நடிப்போடு பாட்டு பாடுவதிலும் தன் குரல் வளத்தால் புகழின் உச்சியை அடைந்தவர்.

பாட்டு பாடவும், வசனம்  பேசவும் பொருத்தமான நடிகராக பி.ஜி.வெங்கடேசன் இருந்ததால் அவருக்கு காளிதாஸ் பட வாய்ப்பை வழங்கினார், இயக்குநர் எச்.எம்.ரெட்டி. 

கவி மற்றும் நாடகாசிரியர் காளிதாஸ் பற்றிய கதை. தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்புகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸுக்கு மணம் செய்துவைத்து விடுகிறார் மந்திரி. அவள் காளியை வேண்ட, காளியின் அருள் மணமகனுக்கு கிடைக்க அவன் காளிதாஸ் ஆகிறான்.

இதில் பி.ஜி.வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலக்‌ஷ்மி இளவரசியாகவும் நடித்தனர். முதல் பேசும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகர்கள் பேசி நடித்தனர். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலக்‌ஷ்மி தமிழிலும், கோவில் பூசாரியாக நடித்த எல். வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள்.

தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான காளிதாஸ் படம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகி தென்னிந்திய மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவரை ஊமைப் படங்களைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் பேசும் படத்தை காண கூட்டம் கூட்டமாக கூடினார்கள். படத்தின் வெற்றியும் வசூலும் பி.ஜி.வெங்கடேசனை மகிழ வைத்தது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்தன.

காளிதாஸ் படத்திற்கு பிறகு வெங்கடேசன் நடிப்பில் வெளியான படம், இரு சகோதரர்கள். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய அந்தப் படத்தில் கே.பி.கேசவன் கதாநாயகனாக நடிக்க, அதில் பொம்மை வியாபாரி பாத்திரத்தில் நடித்த வெங்கடேசன், “வேடிக்கை பொம்மை - விளையாட்டு பொம்மை” என்கிற பாடலையும் பாடி இருந்தார்.

அடுத்து வெளியான பட்டினத்தார் படத்தில் பண்டாரமாக நடித்திருந்தார். இதில் “காயமே இது பொய்யடா... காற்றடைத்த பையடா” என்கிற  பாடலை பாடி நடித்திருந்தார். அந்தப் பாடல் பெரும் புகழ் பெற்று வெங்கடேசனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு 1936 ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் படத்தில் மார்வாடியாகவும், அம்பிகாவதி படத்தில் தோட்டக்கார முனியனாகவும் நடித்திருந்தார்.  டி.ஆர்.,சுந்தரம் இயக்கிய தாயுமானவன் படத்தில் அப்பாவி கணவராக நடித்தவர், டி.ஆர்.ரகுநாத் இயக்கிய ஜோதி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து, மதுரை மாரியப்பா சுவாமிகள் இசையில் உருவான  விபவசுகுண தேவா, பிரம்மன் எழுத்தினால், அருள்ஜோதி தெய்வமெனை ஆண்டு கொண்ட தெய்வம் என மூன்று பாடல்களை பாடி இருந்தார்.

1938ஆம் ஆண்டில் விஷ்ணு லீலா படத்தில் மூன்று வேஷங்கள், தட்சயங்கம் படத்தில் இரண்டு வேஷங்கள் நடித்து இரண்டு பாடல்களையும் பாடி இருக்கிறார்.

1939ஆம் ஆண்டு ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் மாயா மச்சந்திரா, சுந்தர்ராவ் நட்கர்ணி இயக்கத்தில் சாந்தா சக்குபாய், சம்பத்குமார் இயக்கத்தில் பம்பாய் மெயில் என மூன்று படங்களில் நடித்திருந்தார்., வெங்கடேசன்.

அதன் பிறகு 1940 ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் சகுந்தலை திரைப்படத்தில் வண்டிக்காரனாக நடித்து, “பொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே” என்கிற பாடலையும் பாடி இருந்த வெங்கடேசன், அதே ஆண்டில் பூலோகம் என்கிற படத்தில் சாது சச்சிதானந்தனாகவும், ஸ்ரீ பரசுராமர் படத்தில் தபஸ்வியாகவும், நடித்தார். மேலும் சதி முரளி, திலோத்தம்மா, அம்பரீஷன் சரித்திர படமான பக்தி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

1941 ஆம் ஆண்டு கதம்பம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மந்தாரவதி, வேதவதி ஆகிய படங்களில் நடித்த வெங்கடேசன், 1942 ஆம் ஆண்டு குமாஸ்தாவின் பெண், சன்யாசி, மாயஜோதி, கங்காவதார் ஆகிய நான்கு படங்களில் நடித்தார். அதில் குமாஸ்தாவின் பெண் படத்தில் "பாறை மானிடா" என்கிற புகழ்பெற்ற பாடலையும் பாடி இருந்தார்.

அதன் பிறகு 1947 ஆம் ஆண்டில் பொன்னருவி, கங்கணம், 1948 ஆண்டில் ராஜமுக்தி, ஜம்பம், ஞானசௌந்தரி, பிழைக்கும் வழி, மோகினி, கலியுகம் போன்ற படங்களில் நடித்தார். இதில் கலியுகம் படத்தை அவர் பார்க்கவில்லை. ஆமாம், அந்தப் படம் 1952 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், அந்தப் படம் வெளியாகும் முன்பே 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அன்று தனது 40 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

பல திரைப்படங்களில் சன்யாசி, பண்டாரம், சாது, யோகி வேடங்களில் அவருக்கு கிடைத்தன. இந்த சின்ன வேடங்கள் அவருக்கு கிடைக்க காரணமாக இருந்தது அவருடைய குரல் மட்டுமே.

அந்த காலத்தில் காட்சியை நகர்த்த அவ்வப்போது பாடல்கள் தேவைப்பட்டன அதைப் பாட ஒரு வண்டிக்காரன், பிச்சைக்காரன், சன்னியாசி போன்ற பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பாட்டு பாடவும் இது போன்ற பாத்திரங்களுக்காக பொருத்தமாகவும் இருந்த காரணத்தினால் பி.ஜி.வெங்கடேசன் அதிகமாக பயன்பட்டார்.

சோகப் பாட்டிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கிய பிஜி வெங்கடேசன் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகன் என்கிற பெருமையை பெற்றவர். அவர் மறைந்தாலும் அவரை தமிழ் சினிமா என்றும் மறக்காது.

தமிழின் முதல் பேசும் படம்?

தமிழில் முதல் பேசும் படம் தயாரிக்கும் முதல் முயற்சி பம்பாயில் இருக்கும் சாகர் மூவிடோன் என்கிற கம்பெனி 1931 ஆம் ஆண்டில் இறங்கியது. ஜான்சிபாய் என்கிற பெண் நடித்த ‘குறத்தி பாட்டும் டான்சும்’ என்கிற நான்கு ரீல்கள் கொண்ட அந்த குறும்படம் தமிழில் முதல் முதலாக தயாரிக்கப்பட்டது. ஆனால், முழுநீள தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ படமே பாட்டும் நடனமும் மட்டுமல்லாது வசனத்தாலும் வியக்க வைத்தது.

இந்தியில் முதல் பேசும் படத்தை 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி தயாரித்து வெளியிட்ட ஆர்தேஷிர் எம்.இரானி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பேசும் படங்களை தயாரிக்க முடிவு செய்து இயக்குனராக எச்.எம்.ரெட்டி. என்பவரை பயன்படுத்தினார். தென்னிந்தியரான எச்.எம். ரெட்டி, பல மௌனப் படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். ஆர்தேஷிர் எம்.இரானி இயக்கிய ‘ஆலம் ஆரா’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

கவி மற்றும் நாடகாசிரியர் காளிதாஸ் பற்றிய கதை. தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்புகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸுக்கு மணம் செய்துவைத்து விடுகிறார் மந்திரி. அவள் காளியை வேண்ட, காளியின் அருள் மணமகனுக்கு கிடைக்க அவன் காளிதாஸ் ஆகிறான். இதுதான் காளிதாஸ் படத்தின் கதை. 

இதில் மன்னர் விஜயவர்மன் மகளாக வித்யகுமாரி கதாபாத்திரத்தில் தமிழ் நாடக மேடைகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த டி.பி. ராஜலட்சுமி என்பவரை முடிவு செய்த எச்.எம்.ரெட்டி,, காளிதாஸ் வேடத்தில் நடிக்க தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட பி.ஜி.வெங்கடேஷ் என்கிற நாடக நடிகரை ஒப்பந்தம் செய்தார். டி.பி.ராஜலட்சுமி, வெங்கடேஷ் இருவருமே நாடக மேடைகளில் நன்றாக பாடி நடித்து புகழ் பெற்றவர்கள். தமிழ் வசனங்ளை  பேசுவதிலும்,  பாடுவதிலும் பெரிய திறமைசாலிகள். தங்களது குரலால் ரசிகர்களை கவர்ந்தவரகள்.

பேசும் படத்திற்கு நன்கு நடிக்க கூடிய அனுபவம் உள்ள நடிகர்களும், அதே சமயம் அவர்களுக்கு குரல் வளமும் இருக்க வேண்டும் இல்லையா. அப்படிப்பட்டவர்களைத்தான் தேர்வு செய்தார்கள். கோவில் பூசாரியாக எல்வி.பிரசாத், தேவாரம் ராஜாம்பாள், ஜே.சுசீலா, சுசீலா தேவி, எம்.எஸ்.சந்தானலட்சுமி உட்பட பலர் ஒப்பந்தம் செய்து முதல் பேசும் படம் உருவான ‘ஆலம் ஆரா’ படம் உருவான அரங்கிலேயே தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தையும் எடுத்தார்கள்.  

உரையாடல்கள் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இருந்தன. இந்த படம் "விடாபோன்" முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ஒலிக்கச் செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்பட்டது. ஜெர்மன் தொழில்நுட்ப வல்லுனர்களால் ஜெர்மனில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி ஒலி பதிவு செய்யப்பட்டதாக தகவல்.

அப்போது பாடகர்கள் பாடகிகள் மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பாடல் இசை தட்டுகள் மக்களிடம் பெரும் வரவேபை பெற்ற காலம். அதனால், இந்த பேசும் படத்திற்குள் அதிக பாடல்கள் வைக்க வேண்டும் என்று ஐம்பது பாடல்களை வைத்தார்களாம். “மன்மத பாணமடா... மாரினிலே பாயுதடா” என்கிற பாடல் சிறந்த காதல் பாடலாக பேசப்பட்டது. பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. இந்தப் படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது. "ராட்டினமாம் காந்தி கை பாணமாம்" என்ற தேசபக்தி பாடலும் இதில் இடம் பெற்றிருந்தது.

படம் முடிந்து 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கபட்டது. அதுவரை ஊமைப் படங்களைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் முதல் தெனிந்திய பேசும் படத்தை காண கூட்டம் கூட்டமாக கூடினார்கள். பம்மாயில் இருந்து படப்பெட்டி கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தார்கள். படப்பெட்டிக்கு ரோஜா மாலைகள் சூட்டப்பட்டன. தேங்காய்கள் உடைக்கப்பட்டன. பத்தி கொளுத்தல், சூடம் காட்டல் என்று அமர்க்களப்பட்டது. வால்டாக்ஸ் சாலையில் படப்பெட்டியுடன் பெரிய பேரணிபோல கூட்டம் கினிமா சென்ட்ரல் திரையரங்கு வரை வந்தது.

முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியான ‘கினிமா சென்ரல்’ திரையரங்கம் பிறகு முருகன் டாக்கீஸ் என்ற பெயரில் இயங்கியது. இந்தியாவின் முதல் பேசும் படமான "ஆலம் ஆரா"வும் இந்த திரையரங்கில்தான் திரையிடப்பட்டது. இருந்தாலும் முதல் தமிழ் பேசும் என்பதால் ரசிகர்கள் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடினார்கள். அன்று தீபாவளி வேறு. சினிமா அதிசயம் இல்லையா.

காளிதாஸ் படம் அவசரத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் பல தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தபோதிலும், அதையும் தாண்டி இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ராஜலக்ஷ்மியின் பாடலூக்காவும், நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்டது, மேலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்துக்கு செலவு செய்த பணம் வெறும் 8 ஆயிரம் ரூபாய் தான். ஆனால் வசூலித்ததோ 75 ஆயிரம் ரூபாய். கேட்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா. இருந்தாலும் ஒரு வருத்தத்திற்குரிய செய்தி... 1930களில் எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்து விட்டன. அதில் நம் பெருமைக்குரிய காளிதாஸ் திரைப்படமும் ஒன்று. நம் தலைமுறையினருக்கு அந்தப் படத்தை பார்க்கும் பாக்கியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் அவர்களது முயற்சி இன்று மேலோங்கியிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவோம். 

உலகின் முதல் பேசும் படம்

1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா 1926 ஆம் ஆண்டில் பேசும் சினிமாவாக மாறியது. ஆரம்பத்தில் ஊமைப் படங்களை பார்த்து வியந்த மக்கள், பிறகு பேச்சு இல்லாவிட்டாலும் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த பின்னணி இசை ஒலியுடன் கேட்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

1926 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், "டான்டுவான்" என்கிற சிறிய படத்தை முதல் பேசும் படமாக தயாரித்தது. பயிற்சியின் முயற்சியாக விளைந்த அந்த குறும் படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டே "தி ஜாஸ் சிங்கர்" என்ற படத்தை தயாரிக்க வைத்தது.

முதல் முழு நீளப் பேசும் படமான "தி ஜாஸ் சிங்கர்", 1927 அக்டோபர் 5 ஆம் தேதி திரையிடப்பட்டது. திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒலி-ஒளி படங்கள் பல தயாராக தொடங்கின. ஊமை படங்களை திரையிட்டு வந்த திரையரங்குகள் பேசும் படங்களை திரையிட தங்களைத் தயார் படுத்திக் கொண்டன.

ஹாலிவுட்டில் யுனிவர்சல் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட ‘மெலொடி ஆஃப் லவ்’ எனும் படம் 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் இருந்த எல்வின்ஸ்டன் பிக்சர்ஸ் பேலஸில் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கின் உரிமையாளர் ஜெ.ஜெ.மதன், பேசும் படம் தயாரிக்கும் பணியை கல்கத்தாவில் தொடங்கினார். ஆனால், அவருக்கு முன்பே இந்தியாவின் முதல் பேசும் படம் பம்பாயில் தயாராகிக் கொண்டிருந்தது.

ஸ்டார் பிலிம் கம்பெனி, மெஜஸ்டிக் பிலிம் கம்பெனி, ராயல் ஆர்ட் ஸ்டுடியோ, இம்பீரியல் பிலிம் கம்பெனி சார்பாக 130 படங்களை தயாரித்தவர், அர்த்ஷிர் எம்.இரானி. இவர் 1929 ஆம் ஆண்டில் பம்பாய் திரையரங்கு ஒன்றில் ‘ஷோ போட்’ என்கிற பேசும் படத்தை கண்டார். உடனே அவருக்கு பேசும் படம் தயாரிக்கும் எண்ணம் தோன்றியது.

அவரே உரையாடல் எழுதி, பாடலுக்கு மெட்டு அமைத்தார். ஆர்மோனியம், தபேலா, வயலின் இந்த மூன்று இசைக் கருவிகள் மட்டுமே வாசிக்கப்பட்டன. படப்பிடிப்பின் போது இந்த இசைக் குழுவினர் ஒவ்வொரு ஷாட்டிற்கும்  வாசித்தனர். படம் பிடிக்க 6 விளக்குகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன. நடிகர்கள் உருது மற்றும் இந்தி மொழிகளில் பேசினார்கள். 40 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான அந்தப்  படத்திற்கு ‘ஆலம் ஆரா’ என்று பெயர் வைத்து இந்தியாவின் முதல் பேசும் திரைப்படமாக 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி தனது சொந்த திரையரங்கமான மெஜஸ்டிக் சினிமாவில் திரையிட்டார்.

இந்த படத்தில் மொத்தம் பதின்மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பேசும் படம் பார்க்கும் ஆவலில் மக்கள் அலை அலையாக வந்து குவிந்தனர். நான்கு அணா டிக்கெட் பிளாக் மார்க்கெட்டில் நான்கு ரூபாய்க்கு விற்றது. படம் வெற்றிகரமாக எட்டு வாரங்கள் ஓடியது.

உடனே அவர் ‘நூர்ஜகான்’ எனும் படத்தை இந்தி, ஆங்கிலம் இரு மொழிகளில் எடுத்தார். இந்தியாவில் தயாரான முதல் ஆங்கில படம் இதுவாகும். இந்தியாவிற்கு இந்தி, ஆங்கிலம் முதல் பேசும் படங்கள் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பர்மிஸ், புஷ்டு, பார்சியன் ஆகிய மொழிகளிலும் முதல் பேசும் படம் தந்த பெருமையை பெற்றவர், அர்த்ஷிர் எம்.இரானி.

‘ஆலம் ஆரா’ படம் வெளியான சில வாரங்களில் 1931 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ‘ஜமாய் ஷஸ்டி’ என்கிற முதல் வங்காள படத்தை மதன் தயாரித்தார். மேலும் ஒரு இந்திப் படத்தையும், நான்கு வங்காளப் படத்தையும் தயாரித்தார்.

பேசும் படங்கள் வெளியான இடங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. எனவே, இந்தியாவில் பல நிறுவனங்கள் பேசும் படங்களை தயாரிக்கத் தொடங்கின. ‘ஆலம் ஆரா’ வெளியான 1931 ஆம் ஆண்டே 22 இந்திப் படங்களும், 3 வங்காளப் படங்களும், ஒரு தமிழ்ப் படமும்  வெளியானது.

இரண்டாவது பேசும்பட இயக்குநர் டி.சி.வடிவேலு நாயக்கர் வரலாறு

1931 ஆம் ஆண்டு முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது. ஆனால், அந்தப் படம் முழுமையான பேசும்படமாக அமையவில்லை என்று பலர் விமர்சனம் செய்தனர். தமிழ், தெலுங்குஇந்தி என பல மொழிகள் பேசி நடித்திருந்தார்கள் என்று கூறினார்கள்.


இந்த நிலையில் 1932 ஆம் ஆண்டு அரிசந்திரா, கலாவா, பாரிஜாத புஷ்பா ராகம், ராமாயணம் ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. இதில் அரிச்சந்திரா, கலாவா இரண்டு படங்களும் முழுநீள தமிழ் பேசும் படங்களாக வெளியாகி உள்ளன.


'அரிச்சந்திராஏப்ரலில் வந்தது என்றும்காலவாசெப்டம்பரில் வெளியானது என்றும் கூறப்பட்டது. உண்மையில்காலவாபற்றியோஅரிச்சந்திராபற்றியோ படமும் கிடைக்காததோடு இவற்றிற்கான ஆதாரங்களும் இல்லாததால்தான் இந்தக் காலக்கட்டங்களில் வந்த பல திரைப்படங்கள் பற்றி நம்மிடையே தப்பான கருத்துக்கள் உலவுகின்றன. 


அரிச்சந்திராபடம் பற்றியும் பல புனைவுகள் எழுதப்பட்டன. அதை ராஜா சந்திரசேகர், சர்வோத்தம் பதாமி, டி.சி. வடிவேலு நாயக்கர் என்று பலபேர் இயக்கினார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், படத்தை டைரக்ட் செய்தது வடிவேலு நாயக்கர்தான் என்று தியோடர் பாஸ்கரன் என்கிற ஆய்வாளர்நம் தமிழர் செய்த படங்கள்என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.


ஆரம்பகால தமிழ்ப் படங்களை பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோதான் படமாக்கினார்கள்கதை, நடிப்பு, மற்ற திறன்கள் நம்மிடையே இருந்தாலும் பேசும் சினிமா டெக்னிக்கல் விஷயங்கள் வடநாட்டில்தான் பெரும்பான்மையாக இருந்தன. 


அதனால், பேசும் சினிமா பற்றி தெரிந்து கொள்ள பம்பாய் சென்று சாகர் பிலிம்ஸ் நிறுவனத்தில் இணைந்த டி.சி.வடிவேலு நாயக்கர். சினிமா தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொண்டார். நேர்மைக்கு பெயர் பெற்ற அரிச்சந்திர மகராஜாவின் கதையை டி.சி.வடிவேலு நாயக்கர் எழுதிசாகர் பிலிம் கம்பெனிக்கு சம்பூர்ண அரிச்சந்திரா என்கிற பெயரில் இயக்க தொடங்கினார். படம் இயக்கும் போது அவருக்கு தொழில் நுட்பத்தில் உதவியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவரை படநிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அவர் பாதியிலேயே கருத்து முரண்பாடு கொண்டு வேலை செய்வதை நிறுத்தியதால், அப்போது அவருக்கு உதவியாளராக பணிபுரிந்த சர்வோத்தம் பதாமி என்பவர் டெக்னீக்கல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டார். 


அரிச்சந்திரா படத்தில் வி.எஸ்.சுந்தரேச அய்யர், டி.ஆர்.முத்துலட்சுமி, டி.பி.ராஜலட்சுமி உட்பட பலர் நடித்திருந்தார்கள். அரிச்சந்திரா படத்தின் படப்பிடிப்பு இருபத்தியோரு நாட்களில் நடந்துள்ளதாக தகவல். 


அரிச்சந்திரா படம் வெளியாவதில் தாமதம் ஆனதும், அடுத்து தனது நண்பர் பம்மல் சம்பந்தம் முதலியாரின் 'கலாவா' நாடகத்தை கலாவா ரிஷி என்கிற பெயரில் எடுக்க முயற்சி செய்துள்ளார். பம்மல் சம்பந்தம் முதலியாரின் நாடகக் குழுவானசுகுண விலாச சபையில் ஓர் உறுப்பினராக, பெரிய ஜாம்பவானாக அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார், டி.சி. வடிவேலு நாயக்கர். அதனால், உடனடியாக தனது கதை படமாக்க ஒப்புக் கொண்டார், பம்மல் சம்பந்தம் முதலியார்.


புகழ்பெற்ற நாடக்குழுவான கண்ணய்யாவின் நாடக்குழுவில் ராஜபர்ட்டாக நடித்த பி.பி.ரங்காச்சாரி, கலாவா படத்தில் நாயகனாக நடிக்க, அவருடன் வி.எஸ்.சுந்தரேச ஐயர், டி.ஆர்.முத்துலட்சுமி உட்பட பலர் நடித்தனர். புராண படமாக உருவான காலவா படம் முழுமையான முதல் தமிழ் பேசும் படமாக வெளியானது. 


1932ல்அரிச்சந்திராமற்றும் காலவா இரண்டு படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது. அதன் பிறகு 1933 ஆம் ஆண்டுபிரகலாதன்என்கிற படத்தை இயக்கினார், வடிவேலு நாயக்கர். அதைத் தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு வெளியான சக்குபாய் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதினர்.


1936 ஆம் ஆண்டு எம்.எம்.தண்டாபாணி தேசிகர் நடித்தபட்டினத்தார்படத்தின் கதையை எழுதிய டி.சி. வடிவேலு நாயக்கர், அதே ஆண்டில்மீராபாய்படத்தின் திரைக்கதை, வசனம், எழுதி நாராயணனுடன் இணைந்து அந்தப் படத்தை இயக்கவும் செய்தார். இதில்பட்டினத்தார்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் மட்டும் 25வாரங்கள் ஓடியது.


மறுபடியும் .நாராயணனுடன் இணைந்துவிராட பருவம்படத்தை இணைந்து இயக்கிய டி.சி.

வடிவேலு நாயக்கர், அதன் பிறகுகவிரத்ன காளிதாஸ்’, ‘விஸ்வாமித்ராபடங்களுக்கு கதை எழுதினர்.


.நாராயணனின் ஸ்ரீனிவாசா சினிடோன் தயாரித்தஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்படத்திற்கு 1937

ஆம் ஆண்டு வசனம் எழுதிய டி.சி. வடிவேலு நாயக்கர், அதன் பிறகு .நாராயணனுடன் இணைந்துவிக்ரம ஸ்ரீ சாகசம்என்கிற படத்தை 1937 இயக்கி தயாரித்தார்.


அதன் பிறகு பி.என்.ராவ் இயக்கியபிரகலாதாபடத்திற்கு 1939ஆம் ஆண்டு திரைக்கதை எழுதியவர், 1939 ஆம் ஆண்டு பி.என்.ராவ் இயக்கியரம்பையின் காதல்படத்திற்கு அவருடன்

இணைந்து வசனம் எழுதியுள்ளார்.


1940 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் தயாரிப்பில் எம்.கே.ராதா, எம்.ஆர்.சந்தானலட்சுமிடி.ஆர்.மகாலிங்கம் உட்பட பலர் நடித்தசதிமுரளிஎன்கிற படத்தின் கதை - வசனம் எழுதி இயக்கினார். டி.சி. வடிவேலு நாயக்கர்.


1941ஆம் ஆண்டு ஒய்.வி.ராவ் நடித்து இயக்கியசாவித்திரிபடத்துக்கு வசனம் எழுதியவர், அதே ஆண்டில் பி.யூ.சின்னப்பா நடித்தஆர்யமாலாபடத்திற்கும் வசனம் எழுதினர்1944ஆம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடிப்பில் கே.பி.நாகபூசனம் இயக்கியஹரிச்சந்திராபடத்துக்கு வசனம் எழுதிய வடிவேலு நாயக்கர், அதே ஆண்டில் வெளியான பி.யூ.சின்னப்பா நடித்த ஜகதலப்பிரதாபன்படத்திற்கும் வசனம் எழுதினர்.


அதன் பிறகு 1946 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணனுடன் இணைந்துபுலந்திரன்என்கிற படத்தின்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார். அந்தப் படம் முடியவில்லை. பாதியில் நின்றுவிட்டதுஆனால், அவரது கடைசி படமாக பி.யூ.சின்னப்பா நடிப்பில் கே.பி.நாகபூசனம் இயக்கியதுளசிஜலந்தர்என்கிற படம் பதிவாகியுள்ளது. இந்ததுளசி ஜலந்தர்படத்திற்கு கதை வசனம் எழுதி இருக்கிறார், சி. வடிவேலு நாயக்கர்.


1932ல் ஆரம்பித்த டி.சி.வடிவேலு நாயக்கரின் தமிழ் சினிமா பயணம் 1947 வரை நீடித்திருக்கிறது. இந்தக் காலத்தில் சுமார் 20 படங்களுக்கு திரைப்பட இயக்கம், கதை, வசனகர்த்தா என்று பல பரிமாணங்களில் பிரகாசித்திருகிறார். 

1931 முதல் 36 வரைக்குமான காலக்கட்டத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட படங்களில் பல நம்மிடையே இல்லை. அத்துடன் இவை பற்றி தப்பும் தவறுமான கருத்துக்கள் வேறு நம்மிடையே உலா வருகின்றன.